...

14 views

நான் இங்கு யார்...?
உனக்கென்ன வருகிறாய்
ஒரு கவிதைகளால்
கொய்து போகிறாய்...

கவிதை தவிர்த்து
வேறெங்கிலும்
உன்னோடு
உறவாட முடியாத
நான் இங்கு யார்...?

நுரையீரல் நிறைத்து
போகும் காற்றிற்கு
நுரையீரலிடம்
தான் யாரென்று
வினவ தேவையில்லை...
சுவாசித்தலை
தவிர்த்து இந்தகாற்றால்
நுரையீரலிடம்
உறவாட வேறு
இடமேதுமில்லை...

உறவாட இடமேதுமில்லை
என்றாலும்
உயிர்வாழ்ந்திட நிச்சயம்
நுரையீரலுடன்
உறவாடிடத்தானுள்ளது....

எனக்கும் அது போலவே
நான் உயிர்ப்போடு இருக்க
கவிதையோடு
உறவாடிப் போகும்
உன் காதலினால்
இங்கு நீ எனக்கு காற்று...

ஏனோ என் மூச்சுகாற்றாய்
உன் காதலினை
பாவித்ததனால்தான்
உன்னை கரம்பிடிக்க
இயலாது சுவாசித்து
கொண்டிருக்கிறேன் நான்...!

© நித்திலன்...🎭