...

17 views

தனியொரு இரவு...
அத்தனை இரவுகளும்
இருளை சுமந்து
தன்னில் நிலவினை
வலம்வர செய்து
விண்மீன்களின்
துணைகொண்டு
ஏதோ கனவொன்றில்
இளைப்பாறித்தான்
போகுமென்றில்லை....

சில இரவுகள் நிலவினை
தொலைத்திருக்கும்
சில இரவுகள் விண்மீன்களை
தொலைத்திருக்கும்
சில இரவுகள் கனவுகளையும்
தொலைத்துத்தான்
இளைப்பாறி போயிருக்கும்...

எத்தனை இரவுகள்
வந்தாலென்ன போனாலென்ன
அத்தனை இரவுகளையும்
அசைத்துப் பார்க்கும்
வல்லமை கொண்ட
தனியொரு இரவென்று
ஒன்று உண்டு....

அவ்விரவிற்கு கருணையோ
தயவுதாட்சணைகளோ
இருப்பதில்லை....
வாழ்விற்கும் சாவிற்கும்
இடையான ரணங்களை
ஒரே இரவில் கொடுத்து
மரணிக்க செய்து
மற்றுமொரு இரவிற்காக
பிழைக்க செய்து போகும்...!

© நித்திலன்...🎭