...

10 views

ஆண் என்பவன்...!
முறுக்கு மீசையும்
ஒற்றை பார்வையில்
எவரையும்
அடக்கிப்போகும்
குணமும்
புஜபலங்களும்
கொண்டவன்தான்
ஆண் என்று உங்கள்
அகராதியில்
எழுதப்பட்டிருந்தால்
அழித்துவிடுங்கள்
அவர்களெல்லாம்
ஆண்களில்லை...

தன்னை சார்ந்தவர்களுக்காக
தன்னைதொலைப்பவன்
எவனோ
அவனே ஆண்...

ஆண் அன்பில்லாதவன்
இல்லை...
இருக்கும் அன்பினை
கடமைகளுக்குள்
புதைத்துவிட்டு
வெளிப்படுத்த தெரியாதவன்....

தனக்கென்று எதனையும்
தேடிக்கொள்ள
தெரியாதவன்...
ஆசைகளை கட்டுக்குள்
அடக்கத் தெரிந்தவன்...

கண்ணீர் சிந்த
தெரியாதவனில்லை...
தன் ஒற்றை கண்ணீர்
தன்னை சார்ந்தவர்களை
மொத்தமாய்
உருக்குலைத்துவிடுமென
உண்மை அறிந்தவன்...

தன் கடமைகளுக்காக
எத்தனை தூரம் வேண்டுமானாலும்
பயணிக்கும்
திராணி கொண்டவன்...

எத்தனைதான் தன்னை
பெரியவனாய்
எண்ணிக்கொண்டாலும்
தன்னை நம்பி வரும்
பெண்ணொருத்தி
நீங்கள் என் வாழ்வில்
கிடைத்தது எனக்கான
வரமெனும் அங்கிகாரம் அளித்திடாதவரை
அவன் ஒருபோதும்
ஆணாகி போவதில்லை...!


© நித்திலன்...🎭