...

28 views

என்னதாண்டி ஆச்சு உனக்கு..
வகிடு எடுத்து அள்ளி
முடிந்த கூந்தலுக்கு
இன்று என்ன அவிழ்த்து விட்டு
விடுதலை கொடுத்திருக்க..

பேருக்கு சுற்றிக்கொண்ட
புடவைக்கு இப்போ மட்டும்..
புதிசா என்ன நேர்த்தி வந்திருக்கு..

வானவில்லுக்கு போட்டியாய்
வாங்கி அடுக்கிய புடவைகளெல்லாம்..
புதுசா கண்ணில் பட ஆரம்பிச்சுருக்கு..

எழுதுகோலும்.. கறிக்கோலும்
பிடித்த விரல்களுக்கு..
புதிதாக விழிகளுக்கு மை தீட்டும் ஆசை வர காரணம்தான் என்ன..

எப்பொழுதும் இருக்கின்ற
நிலைகண்ணாடிதானே..
நான் இப்போது
மட்டும் என்ன புதுசா என்னிலையில்..
உன்னிலையை கண்டு ரசிக்கணும்..

நேற்றுவரை இருந்தவள்
எங்கே..
என்னும் அளவிற்கு...

அப்படி என்னதாண்டி ஆச்சு உனக்கு....!



© sha💕jan