...

4 views

அன்பே கண்ணம்மா


என்
ஒவ்வொரு
விரல்களுக்கும்

ஒரு
கவிதை சொல்
என்கின்றாள்

ஐவிரல்களுக்கு
மட்டுமா ?????

பத்து
விரல்களுக்கும்
தான் சொல்லேன்
என்றதும்

படார் என்று
பற்றிக்கொண்டேன்
பத்து
விரல்களையும்

எப்படி
இருக்கு
கவிதை

நல்லா தான் இருக்கு
ஆனால் இந்த கவிதையை
எல்லாம் கல்யாணத்துக்கு
பிறகு வாசித்துக் கொள்கிறேன்

இப்போ விடுங்க
பதட்டமா இருக்கு

விட்டதும்
இரண்டு கைகளையும்
தேய்த்து
சூடேற்றிக் கொள்கிறாள்

ஏன் மீண்டும்
கவிதைகள்
கேட்கிறதா
உந்தன் கைகள்

இல்லை உன்னை
அடிக்கச் சொல்லி
கேட்கிறது என்று
செல்லமாக ஒரு அடி

அடித்தது கொஞ்சம்
வலித்துப் போக
ஐயோன்னு அலறிட்டேன்

அம்மா என்னடா நாயே
காலையிலே ஐயோன்னு கத்துறன்னு

அம்மா காப்பி தண்ணியோட நிக்க அப்புறம்தான் விளங்குச்சு ச்சீ எல்லாமே கனவு

மயிலன்