...

23 views

நீதான் என் நினைவின் நகலா..
மலர்வது பாதி..
உதிர்ந்தது பாதி..
சில கணுக்கள்
தாங்கிய முட்கள்.
இன்னும் சில..
வாசம் நிறைந்த பூக்கள்..
இவற்றோடு
பொறுந்துவதுதான்
நினைவுகளின் வடிவமா...

தேடலில் தொலைத்ததுவா..
தொலைத்ததனால் தேடுவதாவா...
இவற்றோடு ஒத்துப்போவதுதான்..
நினைவுகளின் முகமா..

நினைத்த நேரத்தில் கண்முன்..
தோன்றி மறைவதுவா...
இல்லை நினைத்து நினைத்து
தன்னிலை இழப்பதுவா..
இவற்றில் எவற்றோடு
பொருந்தும் நினைவுகளின் குணம்...

கவிதைகள் கேட்கிறது..
இல்லை கண்ணீரை பருகுகிறது..
இவற்றில் எதனோடு
பொருந்திப்போகிறது
நினைவுகளின் பசி...

மௌனம் பிடிக்குமா..
தனிமை விருப்பமா..
இவற்றில் எதனை..
தேடுவது...
நினைவுகளின் ரசனை...

ஆர்ப்பரித்துக் கிடக்கும்
அலைகளா..
இல்லை ஆழ்கடலில்..
புதைந்து கிடக்கும் அமைதியா
எதனோடு ஒத்துப் போகிறது..
நினைவுகளின் மொழி..

கவிதையில்
உயிர்ப்பிக்கப்படுவதுவா..
இல்லையேல்..
உயிருக்குள் உணரப்படுவதுவா..
எது நினைவுகளின் உயிர்..

உணர்ந்தவை
அனைத்திற்கும்
உயிர் கொடுத்தேன்

கவிதையும்..
உன்னைப்போலவே..
கண்சிமிட்டுகிறது..

அப்படியானால்..

நீதான் என்நினைவின் நகலா...!



© sha💕jan