...

3 views

நிழல்
நிழலே
பலமுறை நீ என்னை
பின் தொடர்கிறாய்...
சில நேரங்களில்
நான் உன்னை
பின்தொடர்கிறேன் ...
சில சமயம்
என் காலடியில்
சரணாகதி அடைகிறாய்...
சில சமயம்
பனைமரமாய் மாறி
என்னை பயமுறுத்துகிறாய்...
நான் எழும் போது
நீ எழுகிறாய்...
நான் விழுந்தால்
நீ விழுகிறாய்...
நான் உறங்கினால்
நீ ஓடிப் போகிறாய்
இருட்டை கண்டால்
பயம் உனக்கு...
நீ என்னை விட்டு
ஓடி ஒளிகிறாய்...
கடைசி வரை
இணை பிரியாதிருக்கிறாய்...
நான் புதைக்கப்பட்டால்
என்னுடன்
புதைந்து போகிறாய்...
நான் எரிந்தால்
என்னுடன்
சேர்ந்தே எரிகிறாய்...
இறுதிவரை
என்னை விட்டுப் பிரியாத
இனியவள் நீ!

விக்ணு கௌசிகா