24 views
எறும்புகளுக்கு தானம்
செய்த பாவத்திலிருந்து விடுபட... இதை செய்யுங்கள்..!!
💫 மனிதனாக பிறந்த அனைவரும் பாவத்திற்கு ஏற்ப கர்ம பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
💫 பலர் தற்சமயத்தில் உள்ள மகிழ்ச்சியை மட்டும் கண்டு மற்றவர்களை புண்படுத்தி விட்டு, பிற்பகல் என்ன விளையும் என்பதை பற்றி சிறிதும் கூட நினைத்து பார்ப்பதில்லை.
💫 அவர்கள் அதே வலியை அனுபவிக்கும் பொழுது தான் தெரிகிறது அவர்கள் செய்தது பாவம் என்று...
💫 நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவத்திலிருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். இதனால் அனைத்து கர்ம வினைகளும் தீர்ந்து விடும். மேலும் உங்கள் வாழ்க்கையையே புரட்டும் அற்புதமான பல விஷயங்களை காணலாம்.
என்ன செய்ய வேண்டும்?
🙏 தினந்தோறும் பூஜையறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
🙏 தினமும் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறை என வெள்ளிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.
🙏 மேலும் வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபடும் பொழுது கடவுளுக்கு நெய்வேத்தியமாக சிறு கட்டி வெல்லத்தை படைத்து வணங்க வேண்டும்.
🙏 பூஜை முடிந்தவுடன் படைத்த வெல்லத்தை நிலை வாசலில் கொண்டு வைக்க வேண்டும்.
எறும்புகளுக்கு தானம் :
🐜 பூஜை முடிந்து நிலை வாசலில் வைக்கும் வெல்லத்தை சிறு சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகள் சாப்பிடும். அவ்வாறு சாப்பிடுவதால் நமது பாவங்கள் அனைத்தையும் அவைகள் ஏற்று கொள்ளும் என்பது ஐதீகம்.
🐜 இவ்வாறு எறும்புகளுக்கு தானமளித்து வருவதன் மூலம் நமது வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை காணலாம்.
🐜 இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம்.
Related Stories
38 Likes
4
Comments
38 Likes
4
Comments