...

2 views

காத்திருக்கிறேன் ஞாபகங்களுடன்....
எனது பழைய புத்தகத்தின் பக்கங்கள்,
நேற்றைய என் நினைவுகளை வைத்து,
ஒவ்வொரு புன்னகையும்,
ஒவ்வொரு கண்ணீரும்,
என் வழி வந்த ஒவ்வொருவரும்...
எனக்குள் கீறிய காயங்களும்
வலிகளும் தூசுபடிந்த
நோட்டுப்புத்தகங்கள் போல்
ஞாபகங்களாய் கவலையுடன் சிரித்தன
நான் என்னைத் தேற்றிக் கொண்டேன்
நிகழ்காலம் ஒன்றும் சளைக்கவில்லை இறந்தகாலத்துக்கு
துன்பங்களிலும் கஷ்டங்களிலும்
ஆனாலும் காத்திருக்கிறேன்
ஒரு நல்வாழ்வுக்காக
என் அகம் குளிரும்
ஒரு தருணம் வரும் வரை....
© siriuspoetry

Related Stories