...

8 views

அறையில் ஒரு பூனை
நிசப்தத்தில் திரியும்
அந்தப்பூனையின் நிழல்

யாரும் அறியாப்பொழுதில்
அறையிலிருந்து
தனித்து வெளியேறியது.

என் மனக்கண்களை
திருடிச்சென்ற அப்பூனை
சுவரற்ற வெளியில்
ததும்பும் நிழல் மீது
விருப்பமற்ற நேரங்களிலும்
அயர் உறக்கம் கொள்கிறது.

அறை இருளில்
தேடிக்கொண்டிருந்தேன்...

மனதில்
எங்கெங்கோ விழுந்திருந்த
அப்பூனையின் நிழல்களை.

ஆயினும், அப்பூனை
வருவதும் போவதுமான
கள்ளப்பயணங்களில்
எப்போதும் கவனமாக இருக்கிறது.
உதிரும் அதன் நிழல்களை
அவ்வப்போது
என் மனதில் கொட்டிச்செல்ல...

======================
© sparisan