...

13 views

வாழ்கை ஒரு வரம்
வாழ்க்கை ஒரு வரம்.
வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.
முடிந்த வரை செல்லும் பொழுதே சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்.
ஏனென்றால் இன்றைய நாள் இந்த நொடி மீண்டும் வரப்போவதில்லை.
வாழ்வில் தேங்கிக் கிடக்கும் குட்டை நீர் போல ஒரே இடத்தில் இல்லாமல் ஒரே சிந்தனையில் தேங்கிக் கிடக்காமல் பொங்கி பாயும் குற்றால அருவி போல சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு ஓடிக் கொண்டே இருங்கள்.
அப்போது வாழ்வின் ஒவ்வொரு நாளும் மிகவும் அழகாகும்.
வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.
உங்களை காயப்படுத்திய அதே தருணங்களை
மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்காமல்
முடிந்தவரை அழுது விட்டு மீண்டும் எழுந்து நில்லுங்கள்.
எழும் போது பழைய சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு
புதிய சிந்தனைகளுடன் கூடிய தெளிவுடன் எழுந்து நில்லுங்கள்.
இனிய காலை வணக்கங்கள் 🍫🌷🍬🙏✍️
© KaviSnehidan