...

3 views

காதலும் காலமும்
சிறு பிள்ளைத்தனம் போல அடைத்து வைக்க முடியாத ஒரு வெளிப்பாடு தான் காதல்..
இன்று வெறுத்தாலும் நாளை நேசிக்கும்.
வீணே போய் சண்டை போட்டுக் கொள்ளும். கிட்ட நெருங்கினால் நாணம் கொள்ளும். தூர விலகினால் கோபித்தும் கொள்ளும்.
அடிக்கடி நினைக்க வைக்கும். அவன் செய்கைகளை எல்லாம் தூர நின்று கவனித்துக் கொள்ளும். தேவைகளில் கூடவே இருக்கும். ஒரு கட்டத்தில் யார் என்ன நினைத்தால் என்ன என்று கத்தி உரைக்க செய்யும் நீ தான் என் காதல் என......
மனதில் எழும் பூகம்பங்களை எல்லாம், தூக்கி எறிந்து விட்டு நினைவுகளுக்குள்ளே நிஜமாய் மூழ்கிப் போகும்.....
நினைக்கும் போதெல்லாம் அவன் ஒற்றைப் புகைப்படத்தோடு கதை பேசும். கோபங்களில் திட்டும். ஆனாலும் காதலை பத்திரப்படுத்தும். நிமிடங்களை நெருடல்கள் போல கடக்க செய்யும் தனிமையை ஏறெடுத்துப் பார்த்து தன் எண்ணங்களை அவனுக்காய் வியாபித்துக் கொள்ளும்.
விடிந்தாலும் இருண்டாலும் நினைவது அவனை சுற்றியே உருண்டோடும்.....♥️



© kavi Seelan