...

23 views

கனவு காதலியை தேடி😍😜
#என்காதல்ராட்சஷி

கனவு காதலியின்
காதல் பயணத்தில்

அதிகாலை நேரம்
நிசப்தம் குறைந்து
சேவலின் கூவல்
பறவைகளின்
சங்கீதம்
தென்னை மரங்களின்
மெல்லிய
சலசலப்பு
ஒற்றை
ஓலை குடிசையில்
காதல் பறவைகளாய்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
அன்பின் பிணைப்பில்..,

ஆழ்ந்த உறக்கம் கலைத்து
இமைகளை
சற்றே விலக்கிட
துடிக்கிறது
விழிகள்

என் மார்பில்
மழலையாய் உறங்கிடும்
உன்னை அள்ளியணைத்து
நெற்றிப்பொட்டில்
என்னிதழ் பதித்து
முத்தமிட்டு
இமைவிழித்து
உனதழகை கண்டு
உன்னை
எனக்காய் படைத்து
இவ்வுலகை
எனக்குள் அடக்கிய
இறைவனை வணங்கி
புதிய விடியலை
தினம் தினம் காண்கிறேன்..,

மெல்ல எழுந்து
உன் துயில் கலைக்காமல் நகர்ந்து
உனது பணிகளை
நீ எழுமுன் முடித்து
சூடான தேனிர் குடுவையுடன்
எந்தன் உயிரான
உன்னை அள்ளியணைத்து
கொஞ்சலும் மிஞ்ச
சில முத்தங்கள் கொடுத்து
உன்னிதழ் பருகிடும்
தேனீர் சுவையினை
என்னிதழ் ருசித்திடும்
செவ்விதழ் முத்தத்தினால்..,

அடக்க இயலா காதலுடன்
நீ சொல்லிடும்
I Love you மாமா என்ற
உயிரோசையில்
ஒளிந்திருக்கிறது
நம் காதல் மொழியின்
காவியம்

எனக்காய் நீ துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் ஆயுள் நீளுதடி

எனக்காக ஆசையாய் செய்த
காலை உணவை
உன் கரத்தினில்
அன்பாய் கொடுத்திட
அளவுகடந்தும்
உண்ணுகிறேன்
உன் முகம் மலர்வதினால்..,

நான் பணிசெல்லும் முன்
எனக்கான பணிவிடை செய்வதில்
நீ சாப்பிட மறப்பது இயல்புதானே
என் மடியமர்த்தி
உணவினை ஊட்டிவிட்டு
நீ உண்டபின்னே
நானும் மகிழ்வேன் நிறைவுடன்..,

நான் பணி செல்லும்போது
நீங்காத ஏக்கங்களுடன்
பிரியாத விடைகொடுக்கும்
உன் விழி நீரும் செல்லுமடி
நம் காதலினை..,

விலக இயலாமல்
உனை அப்படியே
அள்ளியணைத்து
இதழோடு இதழ்பதித்து
முத்தங்கள் தின்ற பின்னே
வெட்கத்துடன்
விடைத்தருவாய்..,
மகிழ்வுடன்
விடைபெருவேன்..,
உனை விழிகளில்
ஏந்திகொண்டு..,

பணிச்சுமைகள்
எத்துணை இருந்தாலும்
உன் நினைவினில்
நகர்த்திடுவேன்
உனைசேரும்
நேரத்திற்காக

மாலைவரை நரகமாக
நகர்ந்தாலும்
உனை கண்டபின்னே
என்னுள்ளம்
துள்ளிகுதிக்குமடி
அளவில்லா மகிழ்வில்
தாயை கண்ட
மழலை போல..,

எனக்காய் காத்திருக்கும்
உன்விழிகளை கண்டதும்
உனை மொத்தமாய்
அள்ளியணைத்து
இடைவிடா முத்தத்தில்
உனை முழுதும் குளிரூட்டி
ஒருடலாய் இணைந்திட வேண்டும்

பிரிவுகளே தோற்றுப்போகும்
நம் காதலின் சுவாசம் கண்டு

(கனவு 💔 காதலியின் நினைவாக✍️)
© Manis✒️தனிமைகாதலன்