...

16 views

ராட்சசி 💞
ஓர் பொன்மாலை
மையல் வேளையில்
கார்முகில் வானத்தில்
வெண்ணிலவாய்
மறைந்து நிற்கும்
கண்ணியவள்..!

நாணம் சூட
என்னவளை
நினைவூட்டும்
ஏகாந்தம்தான்
பேரழகோ..!

கவிமொழியில்
காதல் கொஞ்சும்
கவிதுவம்தான்
நின் மௌன
மொழியோ..!

எத்திசையும்
மொட்டவிழ்க்கும்
முத்தமிழ்தான்
நின் விழிமொழியோ..!

என் கரம் பற்றி
நிற்கவில்லை
என் உயிராக
பற்றிக்கொள்கிறாள்
இந்த காதல் மலர்..!

எத்தனையோ
வலிகளை
சுமந்து ரணமான
நெஞ்சத்தில்
வஞ்சியவள்
முகம் புதைத்ததும்
மயிலிறகாய்
வருடி சென்ற
காதலைதான்
என்ன சொல்வேன்..!

வார்த்தைகளும்
தொலைந்துப்போய்
அவள் முன்
வசீகரிக்கப்பட்ட
ஆண்மகனாய்
நின்ற என்னை
தேவதையாய்
கட்டிக்கொண்ட
கவியம்தான்
இவளோ..!

என் காதல் ராட்சசி..!

© Manis✒️தனிமைகாதலன்