...

7 views

எதை .....எதை .....எழுத....✍🏾
எழுதிவிடு என்கிறது மனது
என்னத்தை எழுதுவது என்று கேட்கிறது மூளை....

நேற்று வந்து இன்று போன
என் மகிழ்வையா....
மழலைகளையா....

இன்று காலையிலிருந்து
வராமல் போய்விட்ட
மின்சாரத்தையா....

மாறி மாறி வந்து போன
விருந்தினர்களையா....

படிக்க வேண்டும்
படிக்க வேண்டும்
என்று பலநாளாக
எண்ணிக் கொண்டு
படிக்காமலேயே
இருந்தது போல...
இன்றைய நாளையும் கடத்திவிட்டதையா....


ஏதேதோ பேச எண்ணி
பரிட்சை வந்த சலிப்பில்
எதையுமே பேசாமல்
எதையுமே பேசாமல் வைத்த
தோழியின் அழைப்பு பற்றியா....


பால்கால பள்ளிப் பருவ
நண்பனைப் பார்த்ததும்
ஒரு புறம் மனம் மகிழ்ந்ததையும்
மறுபுறம் தாழ்வு மனப்பான்மையில்
தகித்ததை எழுதவா....

பல ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு
ஒப்படைத்த வேலையை
ஒழுங்காய்ச் செய்யாததால்
மேலிருந்து கசியும் நீரால்
மனிதர்களின் நேர்மையை
எண்ணி மனம் கசந்ததை
எழுதவா....


இத்தனை வேலைக்குள்ளும்
இரவில் சலிப்புப் பார்க்காமல்
எனக்குக் கறி சமைத்துக் கொடுத்த
அந்த மிஞ்சிய அன்பை எழுதவா.....

இல்லை இந்நேரத்தில்
விட்டு விட்டுத் தூறும்
மழையை எழுதவா....?


இத்தனைக்குப் பிறகு
இப்போது கண்ணுக்குள் வந்து
நின்றழைக்கும்
என் அன்புத் துயிலை எழுதவா....

#தமிழ்நிழல்