...

7 views

நட்பும் நானும்
எல்லாம் கண்ணிமைப்பதற்குள்
ஒரு கனவு போல முடிந்து போய் விட்டது!
நான் தனித்த தாவரமானேன்!

தனித்த தீவில் விடப்பட்ட
விலங்காக அலைவேன்
இனிமேல்

எட்ட நின்று தூற்றும்
இவ்வுலகில் உண்மையாகவே
எல்லாம் பார்த்துக்
கொள்வோம் வா நீ! என்று
எனக்காக துக்கப்படும்
என்னைத் தூக்கி விடும்
எனக்குத் துணையாகும்
என்னைக் கொண்டாடும்
என்னை மகிழ வைக்கும்
என்னை ஆற்றும்
தேற்றும் தெளிவு படுத்தும்
என் இரு நட்புகள்
எனது இரு மாபெரும் நம்பிக்கைகள்
கால சுழற்சியில் என்னை விட்டு
தூரமாகி விட்டன!
இத்தனை நாளும்
என்னை விட்டுச் சேய்மையில்
அவர்கள் இருந்தாலும்
சேர்ந்தே இருந்தோம்!
இனிமேல் அப்படி இருக்காது
அருகில் வந்தே போனாலும்
ஆயிரம் மைல் தூரமானதாய்
உணரும் மனது!

அமாவாசை இருட்டு போல
அலங்காரம் செய்யப்படா அரண்மனை போல
ஆளில்லா வீடு போல
நீரே இல்லாது வெற்று நிலமாய்
வெடிப்பு நிலமாய்ப் போன ஆறு போல
உங்கள் அன்பின்றி
வெறுமையாய்ப் போகும் என் உலகம்!

பாலைவனத்தில் தொண்டைக் குழியை
நனைக்கும் ஒரு சொட்டு நீருக்கு அலைவது போல
பாசாங்கு காட்டும் இவ்வுலகில்
பரிதி போன்ற தூய்மையான
உங்களின் அன்பைப் பெற்றதில்
அதி பாக்யசாலி நான்!

தாய்க்கு ஏங்கும் பிள்ளை போல
தங்களின் குரலுக்காகவே
ஏங்கியிருக்கும் என் மனம்!

_- தமிழ்நிழல் ✍🏾

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்நிழல்
#நட்பு #தனிமை