...

3 views

ஆகாயத்தில் ஓர் பயணம்...
ஆகாயத்தில் ஓர் பயணம்...

ஆகாய வானத்தின்
அழகான மௌனத்தில்,
இதமான ஒர் பயணம்,
சற்றே சென்ற பார்வையில்,
ஆழ்மனதின் ஏக்கத்தில்,
நீல வண்ண வானத்தில்
கருமை நிற மேகத்தில்
வெண்மை நிற வடிவத்தில்
புறா போன்ற வடிவத்தில்
மேகக்கூட்டம் அசைந்து வர
சமாதானம் ஆனது மனமும்,
வெண்மை நிற புறா வடிவம்
சட்டென்று கலைந்த மேகத்துடன்
ஒளிந்து கொண்டு இருள் சூழ்ந்த
மேகத்துடன் கார்மேகம் வந்தது,
இடி மின்னலுடன்,
ஜன்னல் இடைவெளியில்
ஒளி விட்டு சென்றது,
காகித கப்பல் விட எண்ணி
அண்ணாந்து பார்த்த கணம்
வானவில்லும் தோன்றியது,
ஏழு வண்ண வட்ட வடிவை
பார்த்த விழிகள் ஏக்கம் கொண்ட
மனதை ஏற்றம் கொண்ட
வானவில் அழகின் ரசனையில்
சற்றே மனமும் லயித்தது,
சற்று நேரத்தில் வானவில்லும்
மறைந்து விட மனமும்
சுமைகளை மறந்து கொண்டு நகர்ந்தது,
வருவதும், மறைவதும்,
ஏக்கமும் இறக்கமும் வாழ்வில்
வந்து வந்து போவது சகஜம்
என்று சமாதானம் ஆனது
தனக்குள்ளே..💐💐💐
© KaviSnehidan