...

6 views

உள்ளம் அது மாறாதோ உன்னை அது சேராதோ....
உயிரதை நீ திருடிய மறு கணம்
சிறு துளியென சிதறுது எந்தன் மனம்....
என் காதல் நான் சொல்ல வார்த்தைகள் போதாது....
நம் காதல் நீ கொல்ல மௌனங்கள் போதாதா....
என் நெஞ்சில் நீ சொன்ன வார்த்தைகள் வாழாதா.....
பிழையேதும் செய்யாத நம் காதல் அது மீழாதா....
உண்மைகள் யாவும் சொன்ன உந்தன் நினைவுகள் அது என் நெஞ்சில் இன்னும் வாழாதா...
சிறுதூரம் நீ சென்றால் எந்தன் நெஞ்சம் அதை தாங்காதே
நெடுந்தூரம் நீ சென்றும் நெஞ்சம் ஈரம் காணாமல் போனதென்ன...
காதல் எல்லாம் மாறிப்போக நினைவுகள் நெஞ்சில் வாழ்வதென்ன...
உந்தன் முகம் மறந்தாலும் எந்தன் பெண்மை தடுமாறுவதென்ன....
உள்ளம் அது மாறாதோ
உன்னை அது சேராதோ....



© lavanya lavanya