...

8 views

மழைத்துளி!
அன்பின் சாரலாய்
மேகமவள் தூறல் செய்கையில்
கரைந்து தான் ஓடும்
மண்சரிவுகள் அல்ல...

மண்ணாகவே தன்
காயங்களை மறைத்த மனங்கள் ....

மழைத்துளி பலரின்
கண்ணீரை மறைக்கும்
மனதின் துளி !

உள்ளங்களை
சிலிர்க்க வைத்து
சிறிது நேரம் நம்மை
மழலையாக்கி தான்
போகிறது தாயவளாக!

எத்தனை வயதுகள்
கடந்தாலும்.....
மழை என்றதும்
சற்று
சன்னலை திறந்து
சாரலில்
நனைந்திடதான்
செய்கிறது!

இந்த மழைத்துளி!
இதயத்தின் துளி!
© Nuradhaag