...

14 views

வாழ்க்கை
காகிதத்திலே தன்மை மறந்தது
நிறைந்து இருந்தது மை

கருவரையிலே கவலைகள் மறந்து
இருந்தான் மனிதன்

காகிதம் பறந்தது அழுக்கோடு
மனிதன் மிதந்தான் கர்வத்தோடு

காகிதம் சென்றது குப்பைக்கு
மனிதன் வீழ்ந்தான் மண்ணில்

காகிதம் எரிந்து சாம்பலானது
மனிதனும் எரிந்து சாம்பலானான்

காகித சாம்பல் உரமானது
மனிதனின் சாம்பலோ பயமானது மனிதர்களிடையே!!
© All Rights Reserved