...

7 views

பெண்ணியம்
பெண்ணியம் பேசுகின்றான் மேடை....மேடையாய்
ஊர்.... ஊராய்

வீட்டில் பெண்ணியம் பெண்மை எல்லாம் நாடுகடத்தப்பட்டு
வழித் தெரியா காட்டில்
மரணத்தை தழுவியது

வார்த்தைகள் எல்லாம் வேசம் கொண்டு போர்வையால் மூடி
மேடையில் அலங்காரம் செய்த பொம்மை....

பொம்மையோ கைபாவை!

நெஞ்சத்தில் வஞ்சம் கலந்த பின்
வறியவர் என்ன? வாடியவர் என்ன?
எல்லாம் வாழ்க்கை பணம் தானே!

கட்டிய ஆடைகளை போல பேசிய வார்த்தைகளும் பொருள் இன்றி
அனாதையாக மக்களின் இதயத்தில் மலையாக மகுடம் சூடிக்கொள்கிறது

எத்தனை வரங்கள் வாங்கினாலும்

எத்தனை சட்டங்கள் வந்தாலும்

எத்தனை கல்விகள் தோன்றினாலும்

பெண்ணியம்.... பெண் இங்கு அழிக்கப்பட்டு தான் இருக்கும் உலகம் அழியும் வரை....!
© குந்தவை