...

11 views

உன்னையே நினைச்சு
உன்னயே நெனச்சு
உறக்க மறந்து போச்சு

என்னய்யா சொன்ன
ஏக்க கூடிப்போச்சு

சின்னப்பொண்ணு நானு
நாணத்தால செவக்க

உம் பேரச் சொல்லி
உதடு குவியும் போது

உள்ளூர ஏதோ
சிறு பட்டாம்பூச்சி பறக்க

பாவி மனம் தன்னால் படபடக்குதய்யா

பக்கம் நீ வந்து
முத்தம் தந்த நெனப்பில்

பகலிரவு எல்லா
என்ன பாடாபடுத்துதய்யா

எ மீசக்கார மாமநீ வர்ர நேரத்துக்காக
என் நெஞ்சுருகி நிக்குத்தய்யா

உ நேச சுமந்த நெஞ்சு
கொஞ்ச பார சுமக்கு முன்னே
கொஞ்சிட வழி தேடுதய்யா உன்ன கட்டிகிட்டே....


© geetha S