...

17 views

காதலாய் ஓர் கவிதை....
கவிதையை சிலர் கைப்பிடிப்பர்...
கவிதை சிலர் கையைப் பிடிக்கும்...
கவிதைக் கைப்பிடித்த
கவிஞர்களில்
கனாக் கண்ணனும்
ஒருவர்...
உன் கவிதைப் புல்லாங்குழலுக்கு
மயங்காதவர்களில்லை...

உங்கள் கவிதைகளில்
காதல் வளர்த்தவர்கள்
பலர்....

கல்யாணத்திற்குப்
பிறகும் எப்படி காதலிக்கலாமென்று (மனைவியைத்தான்)
கற்றுக் கொடுக்க உன் கவிதைகளுக்கு ஈடில்லை

அடுப்பங்கரை ஊடலும்
தாழ்வாரத் தழுவலும்
கொல்லைப்புற முத்தங்களும்
உனது எழுத்துக்களில்
வந்து... வந்து
சிந்துபாடிச் செல்லும்...

மொத்ததில்
நீ ஒரு முத்தக்கவிஞன்
பெண்களின் உள்ளங்களை
கொள்ளை கொண்ட
மொத்தக் கவிஞனும் நீதான்...

உனக்கினிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...💐💐💐💐