என்னை என்ன செய்தாய் செந்தமிழே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே!
காண்பது யாவிழும்
உன்னையே தேடுது
என் விழியே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
உன்னை
பயின்றோரை
சிகரம் தொட வைத்தாய்!
உன்
நூலெனும் ஏட்டினாலே
பலர் அறிவின் வாசலை திறந்தாய்!
அம்மா
என்று அழைக்க
தமிழ் சொற்களுட்டி வளர்த்தாய்!
தூய
தாயாகி குழந்தைகளாய்
எங்களை அரவணைத்துக்கொண்டாய்!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
தொன்மை
காலம் பிறந்து
நாளையெனும் காலமும்
எங்களை ஆளும் மொழி நீயே!
முன்மை
பிறப்பெடுத்து இன்றும்
என்றும் உலக சிறப்பு பெற்றதும் நீயே!
இலக்கணமாய்
எளிமையாக ஒலிப்பதில்
முதலிடமாய் இருக்கும் மூத்த மொழியும் நீயே!
ஒண்மை
அறிவுகளை தந்து
உலகை வழி நடத்தும்
தன் நிகரில்லாத மொழியும் நீயே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
வளமையும்
என்றும் எழிலோடும்
அழியாத வரம் பெற்ற மொழியே!
சொல் வளத்தால்
வளமை நிறைந்த
எங்கள் தாய்மொழி தமிழே!
தாய்மை இருந்து
பல உலக மொழிகளை
ஈன்றெடுத்த தாய்மொழி தமிழே!
தூய்மை
நிறைந்த சொற்களால்
பெருமை தந்த பைந்தமிழே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
செம்மை நிறைந்த
இலக்கண வரம்புகளால்
தெளிவோடு விளங்கும் செந்தமிழே!
மும்மை
வடிவங்களுள் வாழ்வியலோடு
இயைந்த முத்தமிழே!
தனிமை
வளம் கொண்டு கலப்பிடம்
இல்லாத தனிப்பெரும் தமிழே!
இனிமை
பொழிலோடு
இனிமையான சுவைதரும்
தமிழ் என்னும் எங்கள் தாய் மொழியே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
நுண்மை
உளவியல் வரைமுறைகளை
எடுத்துரைத்து விளங்கும் தமிழே!
திருமை
அழகாய்
எங்களை காக்கும் தமிழே!
இயன்மை
எங்கள் வாழ்வோடு பிறந்து
எதற்கும் துணை நிற்கும் தமிழே!
வியன்மை
அகிலத்தார்க்கு நல்லவைகளை
விதைத்த எங்கள் தமிழே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே.
- சங்கத்தமிழன்.
என்ன செய்தாய்
செந்தமிழே!
காண்பது யாவிழும்
உன்னையே தேடுது
என் விழியே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
உன்னை
பயின்றோரை
சிகரம் தொட வைத்தாய்!
உன்
நூலெனும் ஏட்டினாலே
பலர் அறிவின் வாசலை திறந்தாய்!
அம்மா
என்று அழைக்க
தமிழ் சொற்களுட்டி வளர்த்தாய்!
தூய
தாயாகி குழந்தைகளாய்
எங்களை அரவணைத்துக்கொண்டாய்!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
தொன்மை
காலம் பிறந்து
நாளையெனும் காலமும்
எங்களை ஆளும் மொழி நீயே!
முன்மை
பிறப்பெடுத்து இன்றும்
என்றும் உலக சிறப்பு பெற்றதும் நீயே!
இலக்கணமாய்
எளிமையாக ஒலிப்பதில்
முதலிடமாய் இருக்கும் மூத்த மொழியும் நீயே!
ஒண்மை
அறிவுகளை தந்து
உலகை வழி நடத்தும்
தன் நிகரில்லாத மொழியும் நீயே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
வளமையும்
என்றும் எழிலோடும்
அழியாத வரம் பெற்ற மொழியே!
சொல் வளத்தால்
வளமை நிறைந்த
எங்கள் தாய்மொழி தமிழே!
தாய்மை இருந்து
பல உலக மொழிகளை
ஈன்றெடுத்த தாய்மொழி தமிழே!
தூய்மை
நிறைந்த சொற்களால்
பெருமை தந்த பைந்தமிழே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
செம்மை நிறைந்த
இலக்கண வரம்புகளால்
தெளிவோடு விளங்கும் செந்தமிழே!
மும்மை
வடிவங்களுள் வாழ்வியலோடு
இயைந்த முத்தமிழே!
தனிமை
வளம் கொண்டு கலப்பிடம்
இல்லாத தனிப்பெரும் தமிழே!
இனிமை
பொழிலோடு
இனிமையான சுவைதரும்
தமிழ் என்னும் எங்கள் தாய் மொழியே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
நுண்மை
உளவியல் வரைமுறைகளை
எடுத்துரைத்து விளங்கும் தமிழே!
திருமை
அழகாய்
எங்களை காக்கும் தமிழே!
இயன்மை
எங்கள் வாழ்வோடு பிறந்து
எதற்கும் துணை நிற்கும் தமிழே!
வியன்மை
அகிலத்தார்க்கு நல்லவைகளை
விதைத்த எங்கள் தமிழே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே.
- சங்கத்தமிழன்.
Related Stories