...

15 views

வரவு...
சில்லென்ற அருவி நீர் தேகம் தொடும் சிலிர்ப்பு
உன் வியர்வை துளிகளால் தருகிறாய்
அதிகாலை வெயிலின் கதகதப்பு
உன் மூச்சு காற்றினால் கொடுக்கிறாய்
மாலை நேரத்து காற்று
உன் அணைப்பினால் இறுக்குகிறாய்
நிலவின் குளிரை
உன் அருகாமையால் உறைய செய்கிறாய்
பூக்களின் வாசனை
உனை சுவாசிப்பதனால் உணர்த்துகிறாய்
இயற்கையின் வரங்கள் யாவும்
நொடியினில் அடைந்தேன்
உன் வரவினால் . . .