...

6 views

அருப்புக்கோட்டை நேசம்...
அழகியே...
நீ ஆளுயர மழையா...

நெஞ்சுக்குள்ள விழுகிற
ஆலங்கட்டி மழையா...

கொட்டுதடி கொட்டுதடி
எம்மேல பாசம்...

நீ கோவப்படும் போதெல்லாம்...

கொல்லாம கொல்லுதடி
அருப்புக்கோட்ட நேசம்...

நீ கோடிமுறை முறைச்சாலும்
கொஞ்சலாவே தெரியுதடி எனக்கு...

நீ கொஞ்சமா கொஞ்சுனாலோ
ஆத்தால கண்ட கோழிக்குஞ்சாட்டாம்
துள்ளுதடி மனசு...

செக்கச் சிவந்தவானம்
உன் சின்னக் பார்வையில
பஞ்சு பஞ்சா பனிப்பூப் பொழியும்...

சின்ன மனுசன் நான்
சீரான உன்பார்வையில
சட்டுனு உறைஞ்சுடுவே...

சின்னதா ஒரு முறை பிரிஞ்சாகூட
உருதெரியாம கறைஞ்சுடுவே...

நான் கண்ணீர்
வழிஞ்சு நின்னேன்னா...

கண்மணியே என்ன
கட்டிப்பிடி...

கண்ணத்துல ஒரு செல்லக்கடி கடி...

காத்துல பறக்குமடி
கவலையெல்லாம் பொடிப் பொடி...

~*~
© Mutharasu Mahalingam