...

7 views

தனிமைகள்
இன்னும் ஆழமான தனிமையில்
மூழ்கிப்போவதால்.....

இன்னும் கொஞ்சம் அதிகமாக
எனக்குள் என்னையே
மௌனிக்கச்செய்வதால் எதுவும்
தீர்ந்து போய்விடாதென
தெரியாமல்இல்லை.....

மீளத்தெரியுமென்பதால் யாரும்
விருப்பத்தோடு வலிகளை அள்ளிப்பூசிக்கொள்வதில்லை.....

சில சமயம் நாம் மீண்டு வந்துவிட்டோமென நிமிர்கையில்கூட அதே
வலிகள் நம்மை பின்னோக்கி
இழுத்துச்செல்வதுமுண்டு....

ஒருபொழுது வலிமையானவர்களாய்
உணரவைக்கும் துரோகம்
ஒரு சமயத்தில் மாயச்சுழலாய்
நம்மையே பலவீனமாக உணரவைக்கும்.....

எது எவ்வாறு இருந்தாலும் இன்னும்
கொஞ்சம் அமிழ்ந்து
போய்விடலாமா எனத்தோன்றுகிறது
இந்தத்தனிமைகளில்....

#இசைவிழிசந்திரன்.
© Isaivily chanthiran