...

1 views

வாழ்க்கை
ஆம்... வாழவேண்டுமென்ற ஆசைகள்
எவ்வளவு இருந்தாலும்
செத்துவிடத்தோன்றும் வலிகள்
கொடுமையானதுதான்....ஆனால்
எப்பொழுதும் உங்கள் ஆழ்மனதில்
இருக்கும் வாழவேண்டுமென்ற
எண்ணத்தினை மட்டும் விட்டு விடாதீர்கள்....

இப்பொழுது வேண்டுமானால்
இந்த வலிகளை கடப்பது எப்படியென்று
உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்
ஆனால் நிச்சயம் ஓர் நாள் மரணித்துவிடாமல்
வலிகளை கடந்து நீங்கள் வாழும்
கலையினை கற்றுக்கொள்வீர்கள்...

அதன்பிறகு மற்றவர்களைப்போலென்ன மற்றவர்களைவிடவும் அழகான ஒரு
பேரழகான உலகம் உங்களுக்கு உங்களுக்கேயென்று உங்கள் அருகில்
இருக்கும் அதனால்
எத்தனை வலிகள் வந்தாலும்
வாழவேண்டும் என்ற
வைராக்கியத்தினைமட்டும்
கைநழுவவிட்டு விடாதீர்கள்...

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும்
நீங்கள் வாழணும்...
இது உங்கள்
வாழ்க்கை இதை நீங்கள் மட்டுமேதான்
வாழணும்...

#இசைவிழிசந்திரன்.
© Isaivily chanthiran