...

1 views

கனவே நிஜமா!!! ❤
ஓர்இரவு நேரம் அனைவரும் உறங்கும் தருனம்
சில்லென்று காற்று என்உடல் தொட்டுச் சென்றது
உடன் விழிமூடியது - திடீரென காருமேகம் சூழ்ந்தது!!
வானமோ மனம் குளிர்ந்து தன்நெருங்கிய நண்பனான
பூமிக்கு அன்பு பரிசாக மழையைத் தூவ;
தென்றல் அலைபோல்வீச; செடி கொடிகள் விளையாட;
மயில் தோகை யாட்டம் மனம் பறிக்க;
மரத்திலிருந்த பூக்களோ உதிர்ந்து நிலத்தில் விழ;
வருகை தருகிறாள் ஒரு தேவதை!!
திடீரென அறையில் சுழலும் காற்றாடியோ
மின்சாரம் தடைபட்டுநிற்க - அவளின்
அழகிய முகம்
காணாது விழி திறந்தேன் மனம் உடைந்தேன்!!!
மீண்டும் அம்முகம் காண உறக்கம் தொடர்ந்தேன்;
வீட்டிற்குள் நுழைந்த கதிரவனின் ஒளியும் வந்தது,
அவளின் முகம் கண்ட மகிழ்ச்சியில் எழுந்தேன்;
கண்ணா என்றொரு சத்தம் ஒளி்த்தது!
நான்கனவில் கண்ட தேவதை என்கண்முன் வந்து நின்றது;
அந்ததேவதை வேறாருமல்ல என்னை ஈன்றெடு்த்த தாயே...!!!

© _kaakitha_kappal_08