...

3 views

மழை தரும் நினைவுகள்
செல்லமாய் சிணுங்கும் மழைத்தூறல்
சிலசமயம் சீறிப் பாயும்..

சிநேகமாய் கைகுலுக்கி
சில் வண்டாய் ரீங்காரமிடும்..

சட்டென்று குணமாறி
சாட்டையாய் சுழன்றடிக்கும்..

விழி பார்த்து காத்திருந்தால்
வராமல் ஏமாற்றும்..

எதிர் பாராத நேரத்தில்
எங்கிருந்தோ தோன்றி களிப்பேற்றும்..

நான் மழையைத்தான்
சொல்கிறேன்..
மனதை அல்ல..!



© nandini bose