18 views
காதலும் தன்மானமும்
நான் பாறை
ஆடவர்கள் என்னோடு
பழக நினைத்தால்..
நான் கடல் சீற்றம்
ஆண்கள் ஆதிக்கம்
கண்டால்..
நான் நெருப்பு
ஆம்பளைங்க வார்த்தை
பச்சையானால்..
அதனால் தானோ
என்னவோ..
என் பேரன்பும்
பெருங்காதலும்
புரியவில்லை!
என் அவனுக்கு..
சேர்ந்திருந்து
காதலைப் பரிமாறிய காலத்தைவிட..
பிரிந்திருந்து கோபத்தை
வெளிக்காட்டினாலும்
இப்போது தான்
பெருங்காதலின் அலையடிப்பதை மனதோரம் உணர்கிறேன்..
என் மனம் முழுதும்
உனக்காய்
அன்பு சேர்க்கிறேன்
அன்பே!
ஆனால் என்
தன்மானத்தைத்
தரமிழக்கச் செய்யமாட்டேன்!
புரிந்து வந்தால்
ஏற்பேன்!
இல்லையேல் என்
மனதோடு கோர்ப்பேன்
உன் நினைவுகளை!
© யாமினி மழையினி
ஆடவர்கள் என்னோடு
பழக நினைத்தால்..
நான் கடல் சீற்றம்
ஆண்கள் ஆதிக்கம்
கண்டால்..
நான் நெருப்பு
ஆம்பளைங்க வார்த்தை
பச்சையானால்..
அதனால் தானோ
என்னவோ..
என் பேரன்பும்
பெருங்காதலும்
புரியவில்லை!
என் அவனுக்கு..
சேர்ந்திருந்து
காதலைப் பரிமாறிய காலத்தைவிட..
பிரிந்திருந்து கோபத்தை
வெளிக்காட்டினாலும்
இப்போது தான்
பெருங்காதலின் அலையடிப்பதை மனதோரம் உணர்கிறேன்..
என் மனம் முழுதும்
உனக்காய்
அன்பு சேர்க்கிறேன்
அன்பே!
ஆனால் என்
தன்மானத்தைத்
தரமிழக்கச் செய்யமாட்டேன்!
புரிந்து வந்தால்
ஏற்பேன்!
இல்லையேல் என்
மனதோடு கோர்ப்பேன்
உன் நினைவுகளை!
© யாமினி மழையினி
Related Stories
18 Likes
3
Comments
18 Likes
3
Comments