...

3 views

மாலை நேரத்து மயக்கம்
மஞ்சள் வெயில் மறைந்து செல்ல,
நானும் தனியே நடந்து செல்ல,
இந்த பாதை ஏனோ தனிமை என்னும் சுமை மட்டும் உடன்வருதே,
இந்த நொடி மனதின் ஏக்கத்தில் நான் தவிக்க,
தூர குரலும் அவளின் நிழலும் தென்பட, மங்கும் ஒளி பொழுதில் மயக்கம் கொண்டேன் நானும் அவளின் மீது,
என் தொலைதூர காதல் என் முன்னே இருக்க, இதயமோ அள்ளி அணைக்க துடிக்க, அருகில் வர அவளும், நேரமும் காலமும் கடந்து போனதே, இந்த இரவும் சூழ அவளின் இரு விழியில் நான் தொலைந்து போகும் நொடிகள்,
என்னமறந்து நிற்கிறேன், அவளின் குரலில் தொலைத்து விட்ட இதயமும், அவளின் இதழில் மையல் கொண்ட மனதும், எழுதிடுதே பல கவிதைகள்,
அதில் ஏனோ என்னை மறந்து உன்னை வர்ணித்தே இரவெல்லாம் தீர்ந்து போனதே
© அருள்மொழி வேந்தன்