...

7 views

மழலையாக என்னை கண்டேன்
மழலையாக பிறந்து
மங்கையாக வளர்ந்த பின்னும்
மாமனவன் வந்தெந்தன்
மஞ்சம் தீண்ட
மழலையாக மாறுகிறேன்
அவன் மடி சாய்ந்து உறங்கிடவே
அன்னை மடி கண்ட சுகம்
இன்று அவன் மடியும் தந்திடுதே
அடுத்த ஒரு ஜென்மம் தந்தால்
அவன் மடி வேண்டும்
நானும் உறங்கிடவே...
மழலையாக என்னை கண்டேன்
மாமன் மடி சாய்கையிலே!
அன்னை என்று ஆனாலும்
மாமனாக வந்தாலும்
மடி சாயும் சுகம் போதும்
மரணம் தாண்டி வாழ்ந்திடுவேன்.
❤️ ரோகிணி ஜெயராம்