...

7 views

கா. யா. அகரன் பிறந்தநாள்
கா. யா. அகரன்

அன்பு காயாதவனாய்
உயிர்நோயம் போற்ற வேண்டும்!
அறிவு தேயாதவனாய்
உயர்ந்து வாழ வேண்டும்!
அறம் மாறாதவனாய்
அகிலம் போற்ற வாழ வேண்டும்!
கருணை குறையாதவனாய்
ஈரநெஞ்சம் வேண்டும்!
காயாமரம் போல்
நன்மை பல செய்திடனும்!
காயாமொழியழகனாய்
நீ தமிழ் பேச வேண்டும்!
மாபெரும் சபைகளில் நீ
நடந்தால் அகரா
உனக்கு மாலைகள் விழ வேண்டும்!
அகரமுதல்வா நீ
அகில முதல்வனாய்
வலம் வர வேண்டும்!
வாழ்க புதல்வனே
புகழோங்கனும் மகனே!
என் அ-குட்டி அகரனே..!

அகவை 3 நிறைவு..

- யாமினி மழையினி