...

15 views

பாழடைந்த வீடு
பாழடைந்த
வீட்டிற்குள்ளும்
பல கதைகள்
உண்டு...

வாழ்ந்து
கெட்டவர்களின்
கதை சொல்லும்..

ஒவ்வொரு சுவரும்
பல கதைகள்
சொல்லும்....

எத்தனை சந்தோஷங்கள்....
எத்தனை வெற்றிகள்.....
எத்தனை துயரங்கள்....
எத்தனை வருத்தங்கள்...
வாக்குவாதங்கள்....
விழாக்கள்...

எத்தனை பிறப்புகள்
எத்தனை இழப்புகளை
கண்டதோ....
எத்தனை பிரிவுகளை
கண்டதோ...

ஒவ்வொரு ஐன்னலும்
கதவும் அறிந்த
ரகசியங்கள்
எத்தனையோ....

எத்தனை உயிர்களை
தாங்கியதோ...
உணர்வுகளை
ஊட்டி வளர்த்ததோ..

அனைத்தையும்
தன்னுள் புதைத்துக்
கொண்டு கேட்பாரின்றி
தனித்து நிற்கிறது...

இன்று தன்னையே
கண்டு கொள்ள
யாருமின்றி
தன் சுயமிழந்து
சிதிலமடைந்து
கேட்பாறின்றி
அனாதையாய்
நிற்கிறது....

தன் உணர்ச்சிகளை
தொலைத்து....
தன் நிழலை
தொலைத்து
நிற்கிறது
பாழடைந்த வீடுகள்...
பல கதைகளை
சுமந்தபடி....

-ந.ரா.சீதாலஷ்மி