...

10 views

புதைந்த பொழுதுகள்
நமது இதழ்களில் நமது இதழ்கள்
புதைந்த பொழுதுகளில் பிறக்கும் ஏதோவொன்று
மின்சாரம் பாய்ந்து உடல்கள் இரண்டும்
உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உதற
பற்றிக் கொள்ள வாகாய் கையருகில்
சேலையை தாண்டி தெரியும் இடையில்
விரல் பட்ட அந்த நொடியில்
உயரழுத்த மின்சாரம் மின்னலாய் பாய்கிறது
இடிதாங்கி போல் அசராமல் நிற்கிறாய்
மின்னல் தாக்கிய பனைமரமாய் நான்...

© வேலு இரவி 🌞✒️