...

4 views

பெண்....✍🏾
புது உறவு
புது வாழ்க்கை
புது அன்பு
புது கடமை
புது பொறுப்புகள்
புது உணர்வுகள்
புது மாற்றங்கள்
புகுந்த வீடு
இப்படி எத்தனை புதுசு
ஒரு பெண்ணுக்கு......

இத்தனை நாளாய்
பாவாடை சட்டை
போட்டுக்கொண்டு
சவுரியத்திற்குச் சுற்றியவள்....
இன்று திடீரென புடவை
புதுப் புது சம்பிரதாயங்கள்......

வேலைக்குப் போகும் போது கூட ஆறு மணிக்கு அலாரம்
வைத்தாலும் அம்மா வந்து
ஆறேழு சத்தம் போட்டால் தான் தூக்கமே தெளியும்.....

ஆனால் இன்று யாரும் எழுப்பாமல்
நாலு மணிக்கே நாமெங்கேனும்
மறந்து உறங்கி விட்டோமோ
என்று தானாகவே பதட்டத்தில் எழுந்து கொள்கிறாள்.....

ஞாயிற்றுக்கிழமை கூட
தான் சாப்பிட்ட கப்பை நீ வந்து கழுவுமா
என்று சொன்னவள் இன்று
ஒரு தொட்டிப் பாத்திரத்தையும்
அவளே கழுவி எடுத்து வைக்கிறாள்.....

அன்றெல்லாம் என்ன வேண்டும் என்ன வேண்டும்
என அம்மா கேட்டுக் கேட்டுச் சமைப்பார் அவளிடம்.....

இன்று அவள் கேட்டுக் கேட்டு பார்த்துப் பார்த்து சமைக்கிறாள்..... அவளைத் தவிர எல்லாருக்காகவும்....

ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை இல்லை என்று சலித்துக் கொள்வாள் 8 மணிநேர வேலைக்கு.....

இப்போதெல்லாம் எந்நேரமும் வேலை செய்கிறாள் அலுத்துக் கொள்ளாமல்.....

அன்றெல்லாம் Pocket money கேட்பாள் அம்மாவிடமும் அப்பாவிடமும்.... பஜ்ஜியும் வடையும் சாப்பிட.....

இன்று பத்து ரூபாய் கிடைத்தால் கூட சேர்த்து வைக்கிறாள்
கடுகு வாங்கலாம் என....

அவள் சந்தோஷத்திற்கும் விருப்பத்திற்குமே எல்லாம் நடக்கும்....
அவளுக்கான நேரமாகவே அனைத்து நேரமும் இருக்கும்..... அன்றெல்லாம்.....
இன்றெல்லாம் அவளுக்குரிய நேரத்தை ஏதேனும் ஒரு வேலை அபகரித்து விடுகிறது......

படிப்போ.....வேலையோ..... வீடு வந்ததும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டு அம்மா அப்பாவிடம்
கடலை போட்டுக் கொண்டு கலகலவென்று சிரிப்பவள்

இன்று இந்தக் குழம்புக்கு கடலை எண்ணெய் ஊற்றித் தாழிக்கலாமா இல்லை தேங்காய் எண்ணெய் ஊற்றித் தாழிக்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாள்......

அன்றெல்லாம் உப்புமா பிடிக்காது இன்றெல்லாம் ஒரு வேலை மிச்சமாகட்டும் என உள்ளதை சாப்பிட்டு உறங்கி விடுகிறாள்......

உண்மையாகவே பெண் பாடு பெரும்பாடு தான்.....😌

#பெண் #அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்நிழல்