...

10 views

தேடலின் துளி
சிந்தும்
பனித்துளிக் கோர்
கவிதை தேடி

கொட்டும்
மழை மேனியில்
சொட்டும் துளிக்கோர் விளக்கம் தேடி

விழி
மூட வழிந்தோடிய
கண்ணீருக்கும் விடை தேடி

மிருதுவான
பாதச் சப்தங்கள் ஓய்ந்து
கரடு முரடாய் மாறியதனை கண்டோர் வினவல் மொழி தேடி

சிந்தை
நோக்கும் அனைத்திலும்
தேடி தேடி மௌனம் கொண்டது இத் தேடல் துளியும்..!!

© மௌனன்