...

7 views

💞நடுநிசி காதல் 💞
காதல்.....
காதல் என்பது
'சுயநலவாதிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் ஆயுதம்' என்றேன்
அவளைக்
காணும் வரை......

காதல்....
காதல் என்பது தான் 'மனிதன் ' என உலகுக்கு எடுத்துரைக்கும்
ஓர் உன்னத வழி
என்றேன்
அவளைக் கண்ட பின்பு....

அவளைப் பற்றி சொன்னவுடன் இந்த மனதுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!
பாருங்கள் இது கூட என கட்டுப்பாட்டில் இல்லை!
அப்படி மயக்கி இருக்கிறாள் அந்த மாயக்காரி!

நாங்கள் காதலிப்பது இன்னும் யாருக்கும் தெரியாது
உங்களிடம் தான்
முதலில் கூறுகிறேன் ....

எங்களின் சந்திப்பு
இரவின் அரவணைப்பில் பூச்சிகளின் சிரிப்பொலியில் காற்றின் கேலி முனுமுனுப்பில்
அமைதியின்
அனுமதியோடு நிகழும்.....

அவள் முகத்தை நானும்
என் முகத்தை அவளும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்போம்.....

காலம் கணிக்கும் கருவி பன்னிரண்டு முறை தலையில் அடித்துக் கொள்ளும் போதுதான் மௌனம் கலையும் எங்களுள் அதை பெரும்பாலும் செய்வது நானே....

இன்று வர ஏன் தாமதம் என்பேன்
பதில் கூற மாட்டாள்
சரியான கல்லுனி மங்கி....
பதிலாக ஒரு மோகன புன்னகை வீசி என்னை தன் கட்டுக்குள்
வைத்துவிடுவாள் .....

"எத்தனையோ மாதுக்கள் இருக்கையில்
என்னை ஏன் காதலிக்கிறாய்? "-இது அவளின் தினசரி செல்ல சீண்டல் .....

"எத்தனை நாளைக்கு
இந்த இரகசிய சந்திப்பு? பகலில் உன்னை எங்கே சந்திப்பது? "-இது
எனது தினசரி
கேள்விக் கணை....

இருவரது கேள்விக்கும் இருவரும்
எங்களின் காதலினால் மற்றவருக்கு
பதில் கூறி
விடுவோம் .....

அங்கு அன்பின்
பிடியில் இருவரும் கைதிகளாகி விடுவோம் காதல் செய்த குற்றத்திற்காக......

உங்களுக்கு அவளைக் காண ஆசையாக இருக்கிறதா?
சற்றுப்பொறுங்கள்....
அவள் வரும் நேரம்தான்.....

அதோ ....
பன்னிரண்டு முறை அடித்துக்கொண்டுவிட்டது
காலம் கணிக்கும் கருவி
அவள் வரும்
நேரம்தானே இது....

இன்று ஏன் இவ்வளவு தாமதமாகிறது?
ஒருவேளை உங்களை கண்டவுடன் வெட்கப்பட்டு சென்றிருப்பாளோ?
அவள் அப்படித்தான்...

அவளுக்கு புதியவர்களை காணும் போது வெட்கம் வந்து விடும்.....
அப்பொழுததெல்லாம்
தன் சகோதரன் மேகவர்ணன் பின்னால் ஒளிந்து கொள்வாள்....

ஆகா .....
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்
இப்பொழுது தான் ஞாபகம் வருகிறது
மன்னித்துக்கொள்ளுங்கள்
இன்று அவள் வர மாட்டாள்....
ஆமாம்..
உண்மையாக அவள் வரமாட்டாள்..
ஏனெனில்
இன்று அமாவாசை........
© 💞அனுராதை பாரதி 💞

Related Stories