...

18 views

என் பிடித்தம் நீ..உன் பிடிவாதம் நான்..♥️
காற்றோடு சருகுகள் சல சலப்பது
போல் பேசிக்கொண்டிருப்பவள் நான்..

அந்த காற்றின் அசைவிற்கு விழும்
ஒன்றிரண்டு பழுத்த இலையைப் போல்
பக்குவமாய் பேசுபவன் நீ..

பிடித்த பாடல் என்றால் கூடவே
முணுமுணுப்பவள் நான்..

பிடித்த பாடலை கூட
உனக்கு மட்டும் கேட்பது போல்
ரகசியமாய் ரசிப்பவன் நீ..

மழை கண்டால் மழலையாய்
மாறிவிடுபவள் நான்..

லேசான தூரளுக்கே குடை தேடி
எடுக்க செல்பவன் நீ..

விடியலுக்கும்.. அடையும் பொழுதிற்கும்
தனித்தனியே கவிதை சொல்லி
நிமிடங்களின் நீளம் ரசிப்பவள் நான்...

நிற்க நேரமில்லா உன் பரபரப்பு
வாழ்கைக்கு நடுவில் நீ நின்று ரசிப்பதே..
நான் உனக்கு எழுதிய வரிகளை தான்..

உணவையும் உணர்வையும்
பகிர்ந்து பசியாற காத்திருப்பவள் நான்..

பசிக்கு சாப்பிட்டால் போதும் என்பவன் நீ..

கடல் கண்டால் கரை மீள மறுப்பவள் நான்..

கரை கூட தீண்டாதவன் நீ...

இமைகளும் அறியாமல்
விழிகளால் களவாடும்
வித்தை அறிந்தவள் நான்..

வழியில் வந்தாலும் விலகி நின்று
கண்ணியம் காப்பவன் நீ...

உன் சிறு கோபத்திற்கும்
சில்லு சில்லாய் உடைபவள் நான்..

என் சிறு மௌனத்திற்கே காரணம் தேடி
உடைபவன் நீ...

பிடித்தங்களுக்காக கூட
பிடிவாதம் பிடிக்க தெரியாதவள் நான்...

எனக்கும் சேர்த்து அத்தனைக்கும்
பிடிவாதம் செய்பவன் நீ...

பார்த்துக்கொள்ளும் நிமிடங்களில்
ஒரு புன்னகை போதும் என்பவள் நான்...

பார்த்துக்கொள்ளா தூரத்திலும்
நினைத்துக்கொள்ள
உன் பிரியம் போதும் என்பவன் நீ..


நம் நேசத்தின் அகராதியில்..

என் பிடித்தம் நீ..
உன் பிடிவாதம் நான்...♥️



© sha💕jan