...

7 views

என் மகிழ்வின் உச்சம்...
எனக்கான மகிழ்ச்சி
எனக்குள் இருக்கும்
உணர்ச்சி பிரவாகம்
பிம்பமாக எதிரொலிக்க கண்டேன்..
முத்தான தினங்கள்
அவை...
எனக்காக வாழ்ந்து
மகிழ்ந்த
மகத்தான நாட்கள்...
என் வாழ்வில்
நடந்தறியா அதிசயம்...
நானா இப்படி
எனக்குள் ஓர்
ஆச்சர்யம்...
எல்லையில்லா மகிழ்ச்சி..
என்னையும் நேசித்த
ஓர் உயிர்...
என்னுடனே இருக்கக் கண்டேன்...
காந்த கண்கள்
கவர்ந்திழுக்க கண்டேன்
குறுகுறு பார்வையில்
கொஞ்சம் கண்ணம்
சிவந்தேன்...
அன்பான ஸ்பரிசம்
ஆறுதலான வார்த்தையில்
நிலைகுலைய நின்றேன்..
பார்வையோ
பல்லாயிரம் கதை சொல்ல
விழியோடு விழி நோக்க
கள்வனின் கண்களை
எதிர்கெள்ள இயலாமல்
சற்றே தடுமாறி தான் போனேன்
என் செய்வதென அறியாமல்...
கள்வனிவன்
கையுரசி காலார
நடக்கையிலே
மூச்சிக்காற்றின் ஸ்பரிசம் பட்டு
மூர்ச்சையாகி விழப்பார்தேன்
தாங்கிபிடிக்க
நீ இருக்கிறாய் என்பதை
மறந்து...
எந்தன் பிம்பம் தனை
நானே கண்டு ரசித்தேன்...
காத்திருக்கிறேன்
மீண்டும் ஓர்
இனிய
பயணத்திற்காக...

© கவி