...

11 views

காணா நொடிகள்...
அவளை காணாது
நொடிகளை
கடப்பது அத்தனை
எளிதல்ல...

கண்கள் இரண்டும்
கருப்பாய் மாற
காட்சிகள் யாவும்
காணாமல் போகும்...

நிகழ்காலம் நில்லாமல்
நீண்டுகொண்டே போக
எதிர்காலம் என்பது
கேள்விக்குறி ஆகும்...

எண்ணங்கள் அவளையே
வட்மிட்டு சாக
எதிர்மறை எண்ணங்கள்
என்வசம் சேரும்...

காத்திருக்கும் ஏக்கத்தில்
கனவுகள் தேடித்திரிய
இரவுகளையும் சேர்த்து
பகலாக்கி தொலையும்...

காணல் நீராய்
அவளுருவம் தெரிய
கால்கள் தானாய்
அதைத்தேடி ஓடும்...




© manish