...

5 views

நீலக் கடலில் நீச்சல் தெரியா வெண்மதி
நேர்த்தியான நெற்றியில்
இரு புருவம் இணைந்திருக்க
உன் கருவிழி இரண்டும் காந்தமாக
என்னை கவர்ந்து இழுக்குதடா...
கள்வனே !
என் உள்ளம் தன்னை
கொள்ளை கொண்டாயே..
இரவு கூட எரிக்கின்றது..
நீ என் அருகில் இல்லை என்று,
ஆனால் அவை என்னைச் சுடவில்லை.
காரணம்
நீ என்னுள் தானே
உறைந்து கிடக்கின்றாய்..
இருப்பினும் ஏனோ
உனக்கு புரியவில்லை.
நீயின்றி நான் தேய்ந்து கொண்டே இருக்கின்றேன்,
அந்த நிலவை போல...
எப்போது நீ என்னில் கரைந்து என்னை முழுமதியாக்குவாய்?
ஏக்கத்துடனே கழிகின்றது என் ஒவ்வொரு இரவும்.
இப்படிக்கு
நீலக் கடலில் நீச்சல் தெரியா வெண்மதி
❤️ ரோகிணி ஜெயராம் ❤️