...

27 views

ஏன் இத்தனைக் காதல் என் மீது...
ஏன் இத்தனைக் காதல்
என் மீது...
அப்படி என்னதான்
செய்துவிட்டேன்
நானுனக்கு...

விழி ததும்பும் கண்ணீரை
மெல்ல கொன்று புதைத்து
இதழோரம் படரவிடும்
புன்னகையோடு
பெருமூச்சினை இழுத்து
வெளிவிடுகிறேன்...

என் வசம் பதிலேதும்
இல்லை கண்மணியே...
உன் மீதான காதலுக்கு
காரணங்கள்
தேடித்தொலைய முற்பட்டால்
முன் வந்து நிற்பதுவும்
காதலாகவே
இருந்துவிடுகிறது சகியே...

அப்படி என்ன செய்துவிட்டேன்
நானுனக்கு
நான் வாழ நீ ஏன்
இத்தனை
மெனக்கெடுகிறாய்
என் மீதென்ன
இத்தனைக் காதலா
என மூச்சுக்காற்றிடம்
வினவ தெரியவில்லை எனக்கு
வினவினாலும்
காற்றிடம் பதிலேதும்
இருப்பதில்லை...

இந்தக் காதலும்
காற்றைப் போலத்தான்
காரணங்களை
தேடித் தொலையாமல்
நேசங்களை படரவிட்டு
வாழ்ந்து மடிவதே
அதன் சித்தமாகும்....!

© நித்திலன்...🎭