10 views
துணையாக நீ வந்தால்..
துணையாக நீ வந்தால்
துவளாமல் நீளுமிந்த
வாழ்க்கை பாதையதும்
துணிதலுடன் நீகாட்டும்
திசையதில் அவ்வாறே..
துணைவி நீதுணையாக
வரவே வசந்தமதும்
துயில்களைந்து எழில்
கூட்டி இன்முகத்தோடே
வரவேற்கும் வாழ்வெங்கும்..
துணையாக நீவரவே
கோணல்களும் ஓவியமாகும்
கிறுக்கல்களும் கவிதைகளாகும்
கதைப்புகளும் காவியங்களாகும்
சிரிப்புகூட சிறுகுறிப்பு..
எடுத்து எழுதுமளவு
ஏகமாய் பொருந்திய
செழிப்பான வனப்பான
வனத்தின் பசுமைபோல்
எக்காலமதிலும் மாறாத..
எழிலோவியம் போல்..
துணைவி நீயிருக்க
துணைவன் துயிலிலும்
துளாவி தேடும்
கார்மேக கூந்தல்..
கொண்டு காரிகைநீ..
இருளிலும் பிரகாசிக்கும்
ஒளிபொருந்திய விண்மீன்நீ
நிலவின் நகலாய்நீ
அன்புமழையின் ஆக்கம்நீ..
மழைபோல் தொடங்கி
தொடர்ந்து களிப்பூட்டும்
ஆச்சரியம் செறிந்த
அற்புதம் கூடிய
அறிதென பெட்டகம்நீ..
அன்பை அரவணைப்பாய்
அள்ளி தருபவள்நீ..
ஒற்றை சொல்லுக்கு
எப்போதும் மறுசொல்
இல்லை இவனுக்கு..
ஒற்றைப் பார்வை
அதைகாண தவமாய்
கடைக்கண்ணால் காலம்
கடந்தோட காத்திருந்து
காக்குமிவன் காதலை..
தெரிந்தே தென்றல்வந்து
தீண்டுமளவு ஆசை
நாயகி உன்னை
தீண்டிய தென்றலை
தேடுமிவன் தேடலை..
பார்வையில் அர்த்தமும்
சைகையில் மொழியும்
நகர்வில் மனமும்
அசைதலில் விருப்பமும்
அறியுமிவன் புரிதலை..
அறிந்துநீ தரும்
மறுமொழியும் காதலும்
கடைசிவரை நீளவே
துணைவியாய் நீயிருக்க
துயில்கூட துயில்கொள்ள..
எத்தனிக்கும் நம்மை
பிரிக்கவியன்று நம்
காதல்கண்டு அதன்
ஆழமறிந்து ஆச்சரிய
பெருமூச்சு கொண்டு..
துயில்கொள்ளும் வேளை
அதிலும் துயில்கொள்ளாது
நம்காதல் கனவினுள்
கலந்து காதலித்து
களித்து மகிழும்..
துயில்களையும் தருணமதில்
துணைவி முகத்திலேயே
விழிக்க வேண்டுமென்று
படர்கின்ற பகலவனை
பாராது பார்க்கிறேன்..
உன்னையே.. என்மகா
ராணியே.. எந்தன்
பகலவனே..எந்தன்
நிலவொளியே..எந்தன்
எல்லாமுமாய் நீயே..
எக்காலமாகும் போதினிலும்..
எந்த தருணத்திலும்..
எந்த அசைவினிலும்.
எந்த விருப்பத்திலும்..
எந்த முடிவினிலும்..
நீயிருக்க உடன்
நானிருக்க விழைகிறேன்
காதல் கண்மணியே..
கடக்கும் நேரமதையும்
களவாடுவேன் உனக்காக..
© CG Kumaran
துவளாமல் நீளுமிந்த
வாழ்க்கை பாதையதும்
துணிதலுடன் நீகாட்டும்
திசையதில் அவ்வாறே..
துணைவி நீதுணையாக
வரவே வசந்தமதும்
துயில்களைந்து எழில்
கூட்டி இன்முகத்தோடே
வரவேற்கும் வாழ்வெங்கும்..
துணையாக நீவரவே
கோணல்களும் ஓவியமாகும்
கிறுக்கல்களும் கவிதைகளாகும்
கதைப்புகளும் காவியங்களாகும்
சிரிப்புகூட சிறுகுறிப்பு..
எடுத்து எழுதுமளவு
ஏகமாய் பொருந்திய
செழிப்பான வனப்பான
வனத்தின் பசுமைபோல்
எக்காலமதிலும் மாறாத..
எழிலோவியம் போல்..
துணைவி நீயிருக்க
துணைவன் துயிலிலும்
துளாவி தேடும்
கார்மேக கூந்தல்..
கொண்டு காரிகைநீ..
இருளிலும் பிரகாசிக்கும்
ஒளிபொருந்திய விண்மீன்நீ
நிலவின் நகலாய்நீ
அன்புமழையின் ஆக்கம்நீ..
மழைபோல் தொடங்கி
தொடர்ந்து களிப்பூட்டும்
ஆச்சரியம் செறிந்த
அற்புதம் கூடிய
அறிதென பெட்டகம்நீ..
அன்பை அரவணைப்பாய்
அள்ளி தருபவள்நீ..
ஒற்றை சொல்லுக்கு
எப்போதும் மறுசொல்
இல்லை இவனுக்கு..
ஒற்றைப் பார்வை
அதைகாண தவமாய்
கடைக்கண்ணால் காலம்
கடந்தோட காத்திருந்து
காக்குமிவன் காதலை..
தெரிந்தே தென்றல்வந்து
தீண்டுமளவு ஆசை
நாயகி உன்னை
தீண்டிய தென்றலை
தேடுமிவன் தேடலை..
பார்வையில் அர்த்தமும்
சைகையில் மொழியும்
நகர்வில் மனமும்
அசைதலில் விருப்பமும்
அறியுமிவன் புரிதலை..
அறிந்துநீ தரும்
மறுமொழியும் காதலும்
கடைசிவரை நீளவே
துணைவியாய் நீயிருக்க
துயில்கூட துயில்கொள்ள..
எத்தனிக்கும் நம்மை
பிரிக்கவியன்று நம்
காதல்கண்டு அதன்
ஆழமறிந்து ஆச்சரிய
பெருமூச்சு கொண்டு..
துயில்கொள்ளும் வேளை
அதிலும் துயில்கொள்ளாது
நம்காதல் கனவினுள்
கலந்து காதலித்து
களித்து மகிழும்..
துயில்களையும் தருணமதில்
துணைவி முகத்திலேயே
விழிக்க வேண்டுமென்று
படர்கின்ற பகலவனை
பாராது பார்க்கிறேன்..
உன்னையே.. என்மகா
ராணியே.. எந்தன்
பகலவனே..எந்தன்
நிலவொளியே..எந்தன்
எல்லாமுமாய் நீயே..
எக்காலமாகும் போதினிலும்..
எந்த தருணத்திலும்..
எந்த அசைவினிலும்.
எந்த விருப்பத்திலும்..
எந்த முடிவினிலும்..
நீயிருக்க உடன்
நானிருக்க விழைகிறேன்
காதல் கண்மணியே..
கடக்கும் நேரமதையும்
களவாடுவேன் உனக்காக..
© CG Kumaran
Related Stories
9 Likes
0
Comments
9 Likes
0
Comments