...

5 views

#நம்பிக்கையில்லா காதல்.
என்னிடம் சிறிது நாட்கள் நிலவிய மௌனமொன்றை உன் குறுஞ்செய்தியோடு
வந்து கலைந்துவிடாதா என்று நினைத்தே என் நாட்கள் ஏங்குகிறது...!

காலப்போக்கில் காதலை எடுத்துக்கூறி புரியவைக்க எனக்கு நேரம் இருந்தாலும்,
அதை ஒருநொடி செவிக்கொடுத்து கேட்பாயென்று நான் நினைப்பதுமில்லை..
நினைக்க போவதுமில்லை..

உன் எண்ணங்களில் ஒருவரைப் பற்றி அடிமட்டமான நிலையாய்
எதை எண்ணுகிறாயோ,
அதே இடத்தில் அவர்களோடு என்னை ஒப்பிட்டுக்கொள்ளாதே..

அடுத்தவர்களோடு ஒப்பிட்டு பார்த்து வருவதின் பெயரல்ல அன்பும், காதலும்...!

உன் எதிர்பார்ப்புகள் மிக மோசமானதாய் இருந்தாலும்,
அன்று நான் சிந்திய அத்தனை கண்ணீருக்கு பின்னரும் அடியோடு உன்னை வெறுக்க மனமில்லை.
அந்த கண்ணீர்த்துளிக் காதல் மீண்டும் துளிர்க்காது..
துளிர்க்க போவதுமில்லை..

வேறொருவனோடு இருமனத்தில் இணையும் திருமணமாய் வரும் தை மாதத்தில் இணைய போகிறது…!

என்னை மகிழ்விக்க எத்தனையோ உறவுகள் இருக்கும் போது, நீ மட்டுமேன் என்னை காயப்படுத்தி பார்க்கிறாய்..

உன்னை விட்டு விலகவும் முடியாமல்,
ஒரடியாகவே விட்டு செல்லவும் முடியாமல்,
உள்ளுக்குள் வைத்திருக்கும் ஒரு ரணமான வலி எப்படியிருக்கும்..

சிலர் மீதான காதலை அவ்வளவு எளிதில் யாராலையும் புரிந்துக்கொள்ளவே முடியாது.
அதுபோலவே தான் நீயும்…!

காலங்கள் கடந்தாலும் நீயாகவே அதை உணர்ந்தால் மட்டுமே தான் உண்டு.
நெடுங்கால ஒரு நெருடல் உணர்வு உன்னிடம் கேட்க மறந்தது ஒன்றே ஒன்று தான் அது தான் மன்னிப்பு..

நானும் நம்பிக்கையோடு தான் இருந்தேன்.
என்னை புரிந்துகொண்டு நீ வருவாயென்று…!

அந்த நம்பிக்கையை மண்ணோடு சேர்ந்து விதையையும் புதைத்து வைத்தால் விதை மரமாக வேண்டுமானால் முளைக்கும்..

ஆனால் நம்பிக்கையோடு புதைத்து வைக்கும் ஒவ்வொரு அன்பும் இன்னும் ஆழமாகவே புதைந்துத் தான் போகிறது…!

மீள்..




© ER.RANJITHA DHARA