...

15 views

என் துயிலுக்கு சருகொன்று போதும்...
பஞ்சு மெத்தையோ
பட்டுக்கம்பளமோ
வேண்டவில்லை...

காற்றிற்கென
மின் விசிறியோ
சாமரமோ
வேண்டவில்லை....

கட்டியணைத்திட
கனவுகளையோ
வருடிவிட
நினைவுகளையோ
வேண்டவில்லை...

பாரம் தாங்காது
உதிர்த்து விட்ட
கிளையொன்றினால்
சருகாகிப் போன
அந்த இலையினைத்தான்
வேண்டுகிறேன்....

உதிர்வது வாடிக்கையென
தெரிந்த பின்னும்
மனம் நோகாமல்
தளிரொன்றிற்கு
இடமளித்து
வீழ்ந்துகிடக்கும்
அந்த சருகினால் மட்டுமே
இப்போதைய
என் துயிலை நிரப்ப முடியும்...!

© நித்திலன்...🎭