...

14 views

இராட்சஷனுக்கு...
கற்பனையின்
காதலன்...அவனது
கிறுக்கல்கள் கூட
கீர்த்தனை ஆகிறது...
அவனது கவிகளை
வாசிக்கையில்
குற்றால சாரலுக்கும் குளிரெடுக்கும்...
கூதல்காற்றும் வெப்பம் தேடும்...
உந்தன் வரிகளை கண்டவுடன்
இதயத்தின் ஓசை கூட
கெட்டிமேளமாய் கேட்கும்...
உனது வாய்மொழி உதிரா
வார்த்தைகளை
கேளாத நாட்கள் வாழாத நாட்களாகிறது...
கைகளிலிருந்து உதிர்வது
கவிகளா... காவியமா...
கொஞ்சல் மொழிகளின்
சொந்தக்காரன்...
உனை வர்ணிக்க
கோர்வையாய் எழுத நினைக்க...
எழுத்துக்கள் எனைப்பார்த்து
சிரிக்கிறது...
கவிதையின் மன்னனுக்கு
உன்னால்
கவியெழுத இயலுமா என்று..
கவிகளின் ராட்சஷனுக்கு
கௌரவமாய் வாழ்த்துக்களை
இயம்புவது மட்டுமே நலமாகும்...


© கவி