...

11 views

அவனுக்கு ஒரு கோடியில் அவள்
அவள் இன்று
வெயிலாகி இருந்தாள்.

பெரிய ரொட்டியை
கனவில் இழுக்கும்
எறும்பை போன்று

அவள் தனக்குள் மீண்டும்
கேட்டு கொண்டிருந்தாள்.

அவன் ஏன் இப்படி
வெயிலாக ஆனான்
என் மனதுக்குள்.

அவள் குளிக்கையில்
மழை அவ்வூரை
துவட்டி கொண்டிருந்தது.

குளிர்ந்த அவளுக்குள்
அதுவரை கிட்டியிராத
முத்தங்களின் மென்சூடு

அருவியாகி அவளை
அறுவடை செய்தது.

சூரியனில் ஐஸ்கட்டியை
பிளப்பது மட்டுமே
இனி தன் வேலை
என முடிவெடுத்தாள்.

பின் அவனை தேடும்
மனதை மனதுக்குள்
சபித்து கொண்டாடினாள்.

அவன் வரும்போது
மறைந்து கொண்டாள்.

இந்த மின்சாரத்தை
அவனுக்கு நான்
தரவே மாட்டேனென்று
சொல்லிக்கொண்டாள்.

நாடெங்கும் மழை
பொழிய பொழிய
அவனும் அவளும்
அவர்களுக்குள்
பூத்து குலுங்கினார்கள்.

ஒருவரை ஒருவர்
அறியாது போயினும்...

© sparisan