...

7 views

தங்க மனசுக்காரன் !
அவளுக்கு என்னை
நினைவில்லை-
என
நினைக்கிறேன் !

ஆனால்,

பேசும்போது
அடிக்கடி
என் பேச்சில் அவளைக்
குறிப்பிடுவேன் !

அன்று ,
அவளை
எப்படி பார்த்தேனோ ,

இன்றும் அப்படியே
நினைக்கும் போதெல்லாம்
பார்க்கிறேன் !

எனக்கு ,

நீ கிடைக்கவில்லை
யென்ற போதும் நான் ,

என்னை ,

ஆற்றிக் கொள்ளவில்லை !

என்
மனதைத்
தேற்றிக் கொள்ளவில்லை !

ஏன் தெரியுமா?
நான்,
காதலையும் அன்பையும்
பெரிதாகக் கருதுகிறேன் !

இளமையில் வரும்
ஆசைகளையோ,

அந்த வயது
உணர்வுகளையோ,
பெரிதாகக் கருதவில்லை !

அதனால் ,

நான் திருமணம் செய்து
கொண்ட பிறகு,

என் காதலி என்றுன்னை
யாரிடமும் குறிப்பிடவில்லை !

அப்படி
யார் குறிப்பிட்டாலும் நான்
குறுக்கிட்டு ,
அப்படி சொல்லாதீர் - எனச்
சொன்னேன் !

அப்படிச் சொல்வது பிழை
என்றேன் !

ஏனென்றால்,

திருமண மரபைக் கடைபிடித்தேன் !

மனைவியைக் காதலிக்க
வேண்டும் என,
எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள் !

உன்னைப் பார்த்ததோ ,
உன்னுடன் பேசியதோ ,
காதலென்று
அன்றும்
நினைக்கவில்லை !

இன்றும்
என்றும்
நினைக்கப் போவதுமில்லை !

எங்கு வாழ்ந்தாலும்,
எவரோடு வாழ்ந்தாலும்,
எல்லோரும் வாழ்வது போல் ,

நீயும் ,
நலமாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் !


© s lucas